පුවත්
News & Events
- විස්තර
- ලියන ලද්දේ Velanai Admin
- ප්රවර්ගය: News & Events
வேலணை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையலான விளையாட்டு விழா -2025



- විස්තර
- ලියන ලද්දේ Velanai Admin
- ප්රවර්ගය: News & Events
பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா -2025

- විස්තර
- ලියන ලද්දේ Velanai Admin
- ප්රවර්ගය: News & Events
Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 28.03.2025 அன்றுஅல்லைப்பிட்டி J/10 வெண்புரவி கடற்கரையை அண்டிய பிரதேசத்தினை சுத்தம் செய்தல் நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன், உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சுற்றுச்சூழல் கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வணக்கத்திற்குரிய அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இலங்கை கடற்படையினர், கிராம மக்கள், தப்ரபேனர் கடல் உணவுகள் பதப்படுத்தல் நிலைய முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



- විස්තර
- ලියන ලද්දේ Velanai Admin
- ප්රවර්ගය: News & Events
பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (28.05.2025) இடம் பெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளும் மற்றும் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவலர்களும் கிராம மட்டத்தில் இயங்கும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் மிக அவசியமாக நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அவர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் பொது மக்களின் விசேட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


- විස්තර
- ලියන ලද්දේ Velanai Admin
- ප්රවර්ගය: News & Events
Sri Lanka Strength lifting Federation இனால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட பழுதூக்கல் போட்டியில் J/17 கிராம அலுவலகர் பிரிவினைச் சேர்ந்த செல்வி ஜெகதீஸ்வரன் சாணுஜா அவர்கள் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்தமைக்காக பிரதேச செயலாளாரினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். செல்வி ஜெகதீஸ்வரன் சாணுஜா அவர்களை பாராட்டி வாழ்த்தி பெருமை கொள்கிறது வேலணை பிரதேச செயலகம் தீவகம் தெற்கு.


























