News
கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வு - 2024
வேலணை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவின்
பரிசளிப்பு நிகழ்வுகளின் தொகுப்பு










குறைந்த வருமானம் பெறுவோருக்கான இலவச அரிசி வழங்கும் நிகழ்வு நிதி பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கான இலவச அரிசி வழங்கும் ஆரம்ப கட்ட நிகழ்வானது நேற்றைய தினம் (21.04.2024) பிரதேச செயலாளர் க.சிவகரன் தலைமையில் J/19 அம்பிகைநகர் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.



அஸ்வெசும நலன்புரி நன்மைகள் நிகழ்ச்சித்திட்டம் 2024 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி - 2024.03.15
Download application👍
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய கீழ் வரும் link இனை cilck செய்யவும்.
images/PDF/Aswasuma-pdf/application_tamil_2024-1-compressed-1.pdf





*நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும கொடுப்பனவுகளை புதிதாக பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு, ஆன்லைன் (online) விண்ணப்பம் வெளியாகி உள்ளது - 2024*
✅விண்ணப்பத்தை மொபைலில் online மூலம் நிரப்பி சமர்ப்பிக்க முடியும்.
*online Application* :
https://iwms.wbb.gov.lk/application
Closing Date: 2024-03-15
23.02.2024 கச்சதீவு அந்தோணியார் தேவாலய உற்சவத்திற்காக செல்லும் பக்தர்களை ஒழுங்குபடுத்தி வழியனுப்பி வைக்கும் கடமையில் பிரதேச செயலாளர் க.சிவகரன் மற்றும் பணியாற்றிய சக அலுவலர்கள்.




சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து 400 பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2024.02.04 ஆம் திகதி காலை 11.00 மணிக்கும், பிற்பகல் 2.00 மணிக்கு புங்குடுதீவு சமுர்த்தி வங்கி வலையத்திலும் மிகவும் சிறப்புற நிறைவு பெற்றது.
எமது பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு .அ.சிவபாலசுந்தரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.F.C.சத்தியசோதி அவர்களும், DR. சந்திரகுமார், கண் வைத்திய நிபுணர் அவர்களும், திரு.P.சசிகுமார், இயக்குனர் Green Layer Environmental Organization, Jaffna அவர்களும், மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் திருமதி.ஜெ.வசந்தி, வேலணை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.சி.சிவகுமார், புங்குடுதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு ஆ. காண்டீபன், கருத்திட்ட முகாமையாளர் திரு. இ. தவமோகன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட அமைப்பின் தலைவர் திரு.சு.அகிலன், வேலணை சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் திரு.மு.சிவனேசன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புத்தகப் பையினையும் தென்னங்கன்றினையும் வழங்கி வைத்தனர்.































