பிரதேச விளையாட்டு விழா 2019
வேலணை பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா 2019 துறையூர் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் 2019.03.28ம் திகதி மாலை 2.00 மணிக்கு திரு .அ. சோதிநாதன் (பிரதேச செயலர் ,பிரதேச செயலகம் வேலணை) தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. எஸ். ஜெயகாந்த் (பிரதேச செயலர், பிரதேச செயலகம் உடுவில்) கலந்துகொண்டார். இவ் வருடத்திற்கான வெற்றி கிண்ணத்தை புங்குடுதீவு சண்ஸ்டார் விளையாட்டுகழகம் தனதாக்கிக் கொண்டது.
























