சர்வதேச மகளிர் தினம் 2019
எமது பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.03.29ம் திகதி காலை 10.00 மணிக்கு திரு. அ. சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக திருமதி. தனபாலசிங்கம் சுமதி (முகாமையாளர், இதம் நிறுவனம்) மற்றும் திரு.பரராஜசிங்கம் காசிபன் (அமைப்பாளர், விடிவெள்ளி அமைப்பு வேலணை) ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறந்த மகளிர் விவகார குழு மற்றும் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் ஆகியோருக்கான சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
























