வர்த்தக கண்காட்சி - 2019
வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வேலணை பிரதேச செயலகத்தில் 2019.04.10ம் திகதி நடைபெற்ற வர்த்தக கண்காட்சி நிகழ்வினை வேலணை பிரதேச செயலர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இக் கண்காட்சியினை நூற்றுக்கணக்கான மக்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பார்வையிட்டு பயன்பெற்றதுடன் மெழுகுவர்த்தி உற்பத்திகள், உள்ளூர் உற்பத்தி உணவு பண்டங்கள், பனைஓலை சார் உற்பத்திகள் மற்றும் கடதாசி உற்பத்தி பொருட்கள் என்பன சுமார் 55000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.
























