இரத்ததான நிகழ்வு - 2019
வேலணை பிரதேச செயலகத்தின் ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் 2019.05.02ம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலரின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் 46 குருதிக்கொடையாளர்கள் இரத்ததானம் வழங்கினர்.

























