வேலணை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க விசேட பொதுக்கூட்டம்
மேற்படி கூட்டமானது திரு. சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் வேலணை கிழக்கு பொது மண்டபத்தில் 2019.05.24ம் திகதி காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் நியாப் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு செயற்படுத்தப்படாமலிருந்த சுழற்சிமுறை கடன் நிதி ரூபா 900,000/- அரசாங்க அதிபரின் அனுமதியுடன் வேலணை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கப்பட்டது.


























