தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வு
பெற்றோர்களுக்கான இந் நிகழ்வு 2019.05.27ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வில் 30 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.திருமதி.பி.சிவஞானவதி (உதவி பணிப்பாளர்,காணிப்பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) மற்றும் திரு.இ. பொன்னம்பலம் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகளுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் பசுமையான சூழலை பேணுவதற்கான அவர்களது சமூக பொறுப்புடைமை தொடர்பாக கருத்துரை வழங்கப்பட்டது.


























