தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம் (2019.05.30 - 2019.06.05) தொடர்பான விழிப்புணர்வு
மேற்படி விழிப்புணர்வு நிகழ்வு 2019.05.29ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளி மாசடைதல் மற்றும் முறையற்ற தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. திரு. இ. சுரேந்திரன் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்,மாகாண விவசாய அமைச்சு, வட மாகாணம்) வளவாளராக கலந்து கொண்டார். பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் இவ் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர்.
























