தேசிய சுற்றாடல் தினம் - 2019
தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்கும்பான் கிராம அலுவலர் பிரிவில் (ஜே/11) 2019.06.04ம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்ட மட்ட மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள்,கமநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராமிய அபிவிருத்தி சமூகத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



























