புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2019.06.08ம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் 811 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


























