தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் வேலணை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் ''போதையற்ற தேசத்தை கட்டியெழுப்புவோம்." எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் 2019.06.28ம் திகதி துறையூர் ஐயனார் சனசமூகநிலையத்திலிருந்து பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது. இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வேலணை பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,ஏனைய உத்தியோகத்தர்கள், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
























