நாட்டுக்காக ஒன்றிணைவோம்
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க அரசின் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சட்ட பூர்வமான நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" யாழ்ப்பாண மாவட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2019.08.23ம் திகதி தொடக்கம் 2019.08.30ம் திகதி வரை இடம்பெற்றது.
அந்த வகையில் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டிய மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் இனங்காணப்பட்டு பல்வேறு அமைச்சு, திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் நிறைவேற்றப்படக்கூடிய சேவைகள் மற்றும் பிரச்சனைகள் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்படும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களான வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு தெளிவூட்டல் நிகழ்வுகள், சிறுநீரக நோய் நிவாரணம், தேசிய உணவுற்பத்தி செயற்றிட்டம், சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டம் சிறுவர்களை பாதுகாப்போம் திட்டத்தின் ஊடாக கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கல்வி தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வுகள் போன்ற செயற்றிட்டங்கள் வெவ்வேறு அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

























