சப்த தீவக நவராத்திரி விழா - 2019
வட மாகாண கலாசார திணைக்களத்தின் வழிகாட்டுதலில் வேலணை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் 2019.10.02, 2019.10.03 ஆகிய இருதினங்கள் பி.ப 3.00 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் சப்ததீவக நவராத்திரி விழா - 2019 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் ஊர்காவற்றுறை, காரைநகர், நெடுந்தீவு, வேலணை ஆகிய பிரதேச செயலகங்கள் கலந்து கொண்டன. இவ் விழாவின் முதல் நாள் நிகழ்வில் திருமதி. சுஜீவா சிவதாஸ் (உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் – வட மாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு திரு. இ. இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – வடமாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

























