News
பிரதேச விவசாய குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் திரு. த. அகிலன் அவர்களின் தலைமையில் நேற்று ( 24.09.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெரும்போகம், கட்டாக்காலி கால்நடைகள், பாதீனியம், விவசாயக் கடன் மற்றும் விவசாயக் காப்பீடு போன்ற விவசாயம் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், 2025 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில், கமநல சேவை நிலையம், பிரதேச சபை, இலங்கை வங்கி, கடற்றொழில் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், காப்புறுதி சபை, கால்நடை வைத்திய பணிமனை ஆகிய திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், திட்டமிடல் பணிப்பாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாய சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.


வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் கரையோர சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக 500 கண்டல் தாவரங்களை நாட்டும் வேலைத்திட்டத்தில் முதற் கட்டமாக 300 தாவர நாற்றுக்கள் மண்டைதீவு சந்திக்கு அருகில் இன்றைய தினம் (19.09.2025) நாட்டப்பட்டதுடன் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கண்டல் தாவர முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வும் செய்யப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தில் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர், மாவட்ட செயலக சுற்றச் சூழல் உத்தியோத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மகளிர் விவகாரக்குழு அங்கத்தவர்கள், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், பிரதேச மட்ட மாற்று திறனாளிகள் அமைப்பு பிரதிநிதிகள், கடற்படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




பிரதேச மட்ட டெங்கு குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (17.09.2025) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.



























