News
இன்றைய தினம் (30.10.2025) பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு தொடர்பாக விளக்கமளிக்கும் செயற்றிட்டம் திரு.க.சிறீதரன் SLAcS - I (கணக்காளர் - யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்) அவர்களால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் 12.00 மணிவரை நடாத்தப்பட்டது.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களினால் ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபா நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இன்றைய தினம் (02.10.2025) பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கயிலாயப்பிள்ளை சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன், பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்பில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று (29.10.2025) சமுதாய உற்பத்தித்திறன் தொடர்பான விழிப்புணர்வு உதவிப்பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சமுதாய உற்பத்தித்திறன் கருத்தரங்கில் ஒருகிணைந்த அணுகுமுறை மூலமும், தனிநபர், வீடு மற்றும் சமூக உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதன் மூலமும், தொழில் முனைவோர் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிறைந்த உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்களை உருவாக்குவதன் மூலமும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது நிகழ்வில் பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 05.09.2025ஆம் திகதி நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட கரம் போட்டியில் தனிநபர் பெண்கள் பிரிவில் மண்கும்பான் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கே.அக்சயா இரண்டாம் இடத்தினையும் ஆண்கள் பிரிவில் துறையூர் ஐயனார் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கே.குருசரண் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களை பயிற்றுவித்த வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர் A.R.அனோஜன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.



























