News
தீவகம் தெற்கு, வேலணை பிரதேச செயலகத்தின் புதிய உதவி பிரதேச செயலாளராக திருமதி.பாமா மோகனமுரளி அவர்கள் தனது கடமைகளை (07.01.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். எமது புதிய உதவி பிரதேச செயலாளரை உத்தியோகத்தர்கள் சார்பாகவும் பிரதேச மக்கள் சார்பாகவும் மனமகிழ்வுடனும் பணிவுடனும் வரவேற்கின்றோம்.

இன்று (01.01.2026) 2026 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகி சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டு கடமைகள் ஆரம்பிக்கப்பட்டது.


Clean Sri Lanka திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வேலணை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 18.12.2025 வியாழக் கிழமை காலை 8.30 – 3.00 மணி வரை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதால் பொதுமக்களை கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.Clean Sri Lanka திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வேலணை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 18.12.2025 வியாழக் கிழமை காலை 8.30 – 3.00 மணி வரை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதால் பொதுமக்களை கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

24.11.2025 - 28.11.2025 மதியம் 03 மணி வரை சீரற்ற காலநிலை மற்றும் தொடரும் பருவகால மழைவீழ்ச்சி, காரணமாக எமது பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 35 குடும்பங்களைச் சேர்ந்த , 124 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உறவினர் வீடுகளில் தங்கி யுள்ளனர். 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

























