News


தீவகம் தெற்கு, வேலணை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.தனபாலசிங்கம் அகிலன் அவர்கள் 27.08.2025 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்றைய தினம் (15.08.2025) பிரதேச மட்ட சிறுவர் சபா கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்களின் உரிமை, பாதுகாப்பு, ஒழுக்கம், தேவைப்பாடு, ஒழுங்கற்ற வரவு , இடைவிலகல், போதை தடுப்பு, மகிழ்வூட்டும் நிகழ்வுகள் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வில் மாணவர்களின் உரிமை, பாதுகாப்பு, ஒழுக்கம், தேவைப்பாடு, ஒழுங்கற்ற வரவு , இடைவிலகல், போதை தடுப்பு, மகிழ்வூட்டும் நிகழ்வுகள் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் போதைத்தடுப்பு உத்தியோகத்தர், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்,மாணவர்கள்,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (16.08.2025) நடைபெற்ற தெய்வீக திருக்கூட்ட நிகழ்வில் வேலணை பிரதேச அறநெறிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

























