பண்பாட்டு பெருவிழா - 2019
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதி அனுசரணையுடன் வேலணை பிரதேச கலாசார பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா -2019 திரு. அம்பலவாணர் சோதிநாதன் (பிரதேச செயலரும் கலாசார பேரவைத் தலைவரும், வேலணை) அவர்களின் தலைமையில் 2019.09.17ம் திகதி பி.ப 3.00 மணிக்கு அல்லைப்பிட்டி புனித பிலிப்நேரியார் தேவாலய திறந்த அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு. இ. இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – வடமாகாணம்) அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக திருமதி. சுஜீவா சிவதாஸ் (உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் – வட மாகாணம்) அவர்களும் கௌரவ விருந்தினராக அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார் (பங்குத்தந்தை, அல்லைப்பிட்டி மண்டைதீவு) கலந்து கொண்டனர்.
இவ் விழாவில் பல்வேறு இசை, நடன நிகழ்வுகள் மற்றும் நாட்டுக்கூத்து நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட வயலின் பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் கலைஞர்களுக்கான 2019ம் ஆண்டின் கலைவாரிதி விருது, 2019ம் ஆண்டின் இளங்கலைஞர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






























