போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் வேலைத்திட்டம் - 2019
போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் 2019.10.17ம் திகதி காலை 9.30 - பி.ப 4.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சு.சதீஷ்காந்த் (உளவளத்துணை உத்தியோகத்தர்), ர.ரவிராஜ் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) வளவாளர்களாக கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு, போதையிலிருந்து மீளல், உளரீதியான சந்தோசமான குடும்பம் போன்ற விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 105 சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.

























