செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
அறிவித்தல்
வேலணை குறிகட்டுவான் வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
பொதுமக்களுக்கான அறிவித்தல்
தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு அனர்த்தம் நிகழ்ந்தால் 24 மணிநேரமும் செயற்படும் #மாவட்ட_அனர்த்த_முகாமைத்துவ_பிரிவு மற்றும் #வேலணை_பிரதேச_செயலக_அனர்த்த_முகாமைத்துவ_பிரிவு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு உடன் அழைக்கவும்.
0212 117 117
0707407445
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
இன்று (27.11.2025)
சிறந்த பெற்றோராகுதல் மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக பெற்றோர்,பராமரிப்பாளர் மற்றும் சமுதாயத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு உதவிபிரதேச செயலாளர் திரு.க.பார்த்திபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.யாழ்ப்பாண பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .பத்மகுமார் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.நிகழ்வில் முன்பள்ளிச்சிறார்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
24.11.2025 - 28.11.2025 மதியம் 12 மணி வரை சீரற்ற காலநிலை மற்றும் தொடரும் பருவகால மழைவீழ்ச்சி, காரணமாக எமது பிரதேச செயலகத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 38 சிறுவர்கள், 9 முதியவர்கள் உள்ளடங்கலாக 85 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உறவினர் வீடுகளில் தங்கி யுள்ளனர்.1வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
நேற்று (24.11.2025)
இலங்கை சமூகப்பாதுகாப்பு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களுக்கான 2024 ம் வருடத்திற்கான தேசிய ரீதியிலான கௌரவிப்பு நிகழ்வானது திருகோணமலையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் 1 மில்லியனுக்கு மேலான தொகைக்கான அடைவு மட்டத்தை பெற்றுக்கொண்ட பிரதேச செயலகங்களின் வரிசையில் எமது வேலணைப் பிரதேச செயலகமும் கௌரவிக்கப்பட்டதுடன் இவ் அடைவு மட்டத்தை பெற்றுக் கொள்ள மூல காரணமாக இருந்து வினைத்திறனாக செயலாற்றிய உத்தியோகத்தர்களையும் கௌரவிக்கும் முகமாக அவர்களின் சேவையினைப் பாராட்டி பாராட்டுப்பத்திரங்கள் மற்றும் பதக்கங்கள் என்பவற்றை சமூக பாதுகாப்பு சபையின் சார்பாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கௌரவத்தை பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

























