News
B3S மென்பொருளில் தரவுகளை பூரணப்படுத்திய கிராம அலுவலர்களுக்கு மெச்சுரை வழங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு தெற்கு J/36 கிராம அலுவலர் கிறிஷ்ரி யுவராஜ் மற்றும் வேலணை J16 கிராம அலுவலர் க. சிந்துஜா ஆகியோருக்கு அரச அதிபரால் வழங்கப்பட்ட மெச்சுரை பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.


வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் வேலணை பிரதேச செயலக மற்றும், வேலணை பிரதேச கலாச்சார பேரவை இணைந்து "ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழா - 2022 " நிகழ்வு நடாத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளருக்கு பொலீசாரால் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று 08.08.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு எமது வேலணப் பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலில் கண்டணப் பேரணி ஒன்று இடம்பெற்றது. இப் பேரணியில் எமது உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்,நிர்வாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், அலுவலகஉத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை இங்கு வெளிப்படுத்தியுள்ளனர்.


வேலணை பிரதேச செயலக விளையாட்டு பேரவையினால் 2022ம் ஆண்டுக்கான வேலணை பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழா 2022.06.27 ம் திகதி திங்கட்கிழமை புங்குடுதீவு சன்ஸ்ரார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.


























