News
இன்று சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச செயலர் தலைமையில் அல்லைப்பிட்டி கடல்நீர் பகுதியில் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், உதவி பிரதேச செயலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கான அறிவித்தல்!
உயர் அழுத்த மின்மார்க்கத்திற்கான திருத்த வேலை தொடர்பானது - வேலணை புங்குடுதீவு பாலம்
புங்குடுதீவு வாழ்மக்களின் மின்சார விநியோகிப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக வேலணை புங்குடுதீவு பாலத்தினூடாக புங்குடுதீவு பிரதேசத்திற்கு கடல்மார்க்கமாக கொண்டு செல்லப்படும் உயர் அழுத்த மின்மார்க்க வடங்கள் மற்றும் மின்கம்பங்களினை பராமரிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
இப்பணிகள் கடல் நீர் வற்றும் காலங்களிலேயே மேற்கொள்ள முடியும் என்பதனால் 06.06.2022 தொடக்கம் 31.07.2022 வரையான காலப்பகுதியில் கட்டம் கட்டமாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.( நயினாதீவு திருவிழாக் காலங்களில் இவ்வேலைகள் இடம்பெறமாட்டாது.)எனவே இக்காலப்பகுதியில் இப்பாதையினூடு பயணிப்போருக்கு சில தடங்கல்கள் / தாமதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இவ்விடயத்தை முன்கூட்டியே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரவிழைகின்றோம்.

2022 உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் 30.05.2022 ஆம் திகதி வேலணைப்பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உலருணர்வைப் பெறத் தகுதியுடைய பொதுமக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை பிரதேச செயலாளரும், கிராம மட்ட உத்தியோகத்தர்களும் வழங்கிவைத்தனர்.





சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு
2022 யூன் 05 ஆம் திகதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சாட்டி கடற்கரையோரம் தூய்மைப்படுத்தல் மற்றும் மரநடுகை நிகழ்வு Caritas Hudec நிறுவனத்தினர் அனுசரனையுடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், Caritas Hudec நிறுவனத்தினர், காவல்துறை உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், வேலணை பிரதேச மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பிறந்துள்ள சுபகிருது சிங்கள தமிழ் சித்திரைப் புத்தாண்டிற்கான வேலை நாளின் ஆரம்பத்திற்காக இன்று காலை 10.10 சுபநேரத்தில் எமது பிரதேச செயலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |




































