News
உலர் உணவு வழங்கல் திட்ட நிகழ்வு- 2023
2023.01.25 புதன்கிழமை பி.ப 12.30 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் உலக உணவு திட்ட அனுசரணையுடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கல் திட்ட நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக
திரு.அ.சிவபாலசுந்தரம் (அரசாங்க அதிபர் - யாழ்ப்பாணம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உலக உணவு திட்ட பிரதிநிதிகள்
Mr. Josphat Mushongah (Emergency coordinator),
Mr. Musthafa Nihmath (Government Partnership Officer), Mr.varunanathan Kajananan (Programme Associate), Mr.Nadeshapillai Thevanayagam (Field Assistant), ஆகியோரும்
திரு.யூட்.நிசாந்தன் (திட்ட முகாமையாளர் - World Vision) அவர்களும்,
திரு.கி.சந்திரசேகரம் (கூட்டுறவு உதவி ஆணையாளர் - யாழ்ப்பாணம்) அவர்களும், திருமதி.ஆ.தவமலர் (பொதுமுகாமையாளர் ப.நோ.கூ.ச வேலணை )அவர்களும் வேலணை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.




























தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு -2023
எமது பிரதேச செயலகத்தில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வானது வெகுவிமர்சையாக (2023.01.18) கொண்டாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் எமது பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, கயிறிழுத்தல் போன்ற போட்டிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையே இடம்பெற்றன.

சேவை நலன் பாராட்டு விழா - 2022
எமது பிரதேச செயலகத்தில் நிர்வாக கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி பணி ஓய்வு பெற்று செல்லும் திரு. சி.இரத்தினேஸ்வரன் மற்றும் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி பணி ஓய்வு பெற்று செல்லும் திரு. இ. குலசிங்கம் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா இன்று (30-12-2022) மு.ப 10.30மணியளவில் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்னும் தொனிப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது.
தேசியக்கொடி பிரதேச செயலாளர் அவர்களால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது . அடுத்ததாக உத்தியோகத்தர்கள் அனைவரும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களினாலும் அரச சேவை உறுதிஉரை எடுக்கப்பட்டது .அதனை தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உரை ஆற்றிய பிரதேச செயலாளர் சவால் மிக்க காலப்பகுதியில் கடமையாற்றிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து இனிவரும் காலத்திலும் அர்ப்பணிப்பான சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் ,பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றது.

ஒளி விழா - 2022
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிடும் ஒளி விழா நிகழ்வானது 28.12.2022 ஆம் திகதி வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>
/>


/>
/>
/>
/>
























