News
தற்போது ஏற்பட்டுள்ள Covid - 19 வைரஸ் தாக்கத்தால் தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலக பகுதியில் தற்போது உள்ள அவசரகால நிலைமைகளை கருத்தில்கொண்டு மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அவசரகால செயற்பாட்டு நிலையம்

தற்போது ஏற்பட்டுள்ள Covid - 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் வேலணை பிரதேச மக்களின் அத்தியாவசிய பொருட்கொள்வனவினை மேற்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு விபரங்கள்



இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் 2020.02.21ம் திகதி சிவராத்திரி தினத்தன்று வேலணை துறையூர் அரிகர புத்திர ஐயனார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு வழிபாட்டு நிகழ்வும் இரவு 8.30 மணிக்கு ஐயனார் கலாமன்றத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.


வேலணை கிழக்கு மத்தி கிராம அலுவலர் பிரிவில் சபிரிகம வேலைத்திட்டத்தின் (சின்னண்ணா வீதி புனரமைப்பு மற்றும் கலைமகள் ஆசைப்பிள்ளை வீதியில் மதகு அமைத்தல்) ஆரம்ப நிகழ்வான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது 2020.03.03ம் திகதி காலை 11.30க்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், திட்டமிடல் பணிப்பாளர் சர்வேந்திரன், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுறுத்தும் நிகழ்வு 2020.02.11,13,14ம் திகதிகளில் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முன்பள்ளிகளில் நடாத்தப்பட்டன.


























