செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
வீதிப்பாதுகாப்பு வாரம் - 2019
வட மாகாணத்திலுள்ள போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடர்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் கௌரவ ஆளுநரின் வழிகாட்டலில் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையும் ஆளுநர் செயலகமும் இணைந்து எதிர்வரும் 2019.10.07ம் திகதி தொடக்கம் 2019.10.13ம் திகதி வரையிலான ஒரு வார காலம் வீதிப்பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தயுள்ளது. அந்த வகையில் 2019.10.07ம் திகதி காலை 9.30 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வீதிப்பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் வீதிப்பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் எமது செயலக உத்தியோகத்தரால் எடுத்துரைக்கப்பட்டது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
சப்த தீவக நவராத்திரி விழா - 2019
வட மாகாண கலாசார திணைக்களத்தின் வழிகாட்டுதலில் வேலணை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் 2019.10.02, 2019.10.03 ஆகிய இருதினங்கள் பி.ப 3.00 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் சப்ததீவக நவராத்திரி விழா - 2019 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் ஊர்காவற்றுறை, காரைநகர், நெடுந்தீவு, வேலணை ஆகிய பிரதேச செயலகங்கள் கலந்து கொண்டன. இவ் விழாவின் முதல் நாள் நிகழ்வில் திருமதி. சுஜீவா சிவதாஸ் (உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் – வட மாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு திரு. இ. இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – வடமாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த ஒரு நாள் நிகழ்வு
அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்க ஆணைக்குழுவின் நிதி உதவியுடன் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.09.09ம் திகதி காலை 9.30 - 4.00 மணி வரை இடம்பெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வேலணை பிரதேச செயலக மாதர் கிராம அபிவிருத்தி சங்க பயிலுனர்கள், இளைஞர்கள், பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
பண்பாட்டு பெருவிழா - 2019
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதி அனுசரணையுடன் வேலணை பிரதேச கலாசார பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா -2019 திரு. அம்பலவாணர் சோதிநாதன் (பிரதேச செயலரும் கலாசார பேரவைத் தலைவரும், வேலணை) அவர்களின் தலைமையில் 2019.09.17ம் திகதி பி.ப 3.00 மணிக்கு அல்லைப்பிட்டி புனித பிலிப்நேரியார் தேவாலய திறந்த அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு. இ. இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – வடமாகாணம்) அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக திருமதி. சுஜீவா சிவதாஸ் (உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் – வட மாகாணம்) அவர்களும் கௌரவ விருந்தினராக அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார் (பங்குத்தந்தை, அல்லைப்பிட்டி மண்டைதீவு) கலந்து கொண்டனர்.
இவ் விழாவில் பல்வேறு இசை, நடன நிகழ்வுகள் மற்றும் நாட்டுக்கூத்து நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட வயலின் பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் கலைஞர்களுக்கான 2019ம் ஆண்டின் கலைவாரிதி விருது, 2019ம் ஆண்டின் இளங்கலைஞர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
நாட்டுக்காக ஒன்றிணைவோம்
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க அரசின் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சட்ட பூர்வமான நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" யாழ்ப்பாண மாவட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2019.08.23ம் திகதி தொடக்கம் 2019.08.30ம் திகதி வரை இடம்பெற்றது.
அந்த வகையில் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டிய மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் இனங்காணப்பட்டு பல்வேறு அமைச்சு, திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் நிறைவேற்றப்படக்கூடிய சேவைகள் மற்றும் பிரச்சனைகள் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்படும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களான வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு தெளிவூட்டல் நிகழ்வுகள், சிறுநீரக நோய் நிவாரணம், தேசிய உணவுற்பத்தி செயற்றிட்டம், சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டம் சிறுவர்களை பாதுகாப்போம் திட்டத்தின் ஊடாக கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கல்வி தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வுகள் போன்ற செயற்றிட்டங்கள் வெவ்வேறு அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

























