செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
வேலணை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க விசேட பொதுக்கூட்டம்
மேற்படி கூட்டமானது திரு. சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் வேலணை கிழக்கு பொது மண்டபத்தில் 2019.05.24ம் திகதி காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் நியாப் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு செயற்படுத்தப்படாமலிருந்த சுழற்சிமுறை கடன் நிதி ரூபா 900,000/- அரசாங்க அதிபரின் அனுமதியுடன் வேலணை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கப்பட்டது.


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
குடியரசு தின நிகழ்வு - 2019
இந் நிகழ்வு திரு.அ.சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம்,வேலணை) தலைமையில் 2019.05.22ம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலகம்,வேலணையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலர் அவர்களால் தேசியக்கொடி ஏற்பட்டது. அந் நேரத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
ஆடைத்தொழிற்சாலையை பார்வையிடல்
வேலணை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவர்கள் தமது பயிற்சி தேவையின் பொருட்டு சங்குவேலியில் அமைந்துள்ள லீஹெட்ஜெஸ்ட் நிறுவனத்தின் ஆடைத்தொழிற்சாலையை 2019.05.09ம் திகதி பார்வையிட்டனர். மேற்படி நிகழ்வானது பிரதேச செயலரின் அனுமதியுடன் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் ஒழுங்குபடுத்தப்பட்டது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
முதியோருக்கான மருத்துவ முகாம்
ஆரோக்கியமான மற்றும் திறமையான முதியோர் பரம்பரை ஒன்றினை உருவாக்குவதனை நோக்கமாக கொண்டு முதியோருக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலகம் வேலணையின் சமூக சேவைப் பிரிவினால் ஜே/22, ஜே/23, ஜே/24, ஜே/25, ஜே/26 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள முதியோருக்கான மருத்துவ முகாம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் 2019.05.16ம் திகதி காலை 9.00 மணிக்கு திரு.சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் நடைபெற்றது. 120 முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

n


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
வாழ்வாதார கடன் வழங்கும் திட்டம் - 2019
நயினாதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க வாழ்வாதார கடன் வழங்கும் திட்டமானது 2019.05.06ம் திகதி நயினாதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு திரு.சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் நடைபெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கு ரூபா 1840000.00 சங்க நிதியிலிருந்து வழங்கப்பட்டது .

























