செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
ஆத்மசாந்தி பிரார்த்தனை
2019.04.21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காட்டுமிராண்டித்தனமான குண்டுத்தாக்குதலினால் உயிர் நீத்தவர்களிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையும் காயமடைந்தவர்கள் குணமடைவதற்கான பிரார்த்தனையும் 2019.05.08ம் திகதி காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
கிராமசக்தி செயற்திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வு
வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி செயற்திட்ட கிராமங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கிராமசக்தி செயற்திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வு 2019.05.03ம் திகதி காலை 9.00 மணிக்கு திரு. அ. சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
இரத்ததான நிகழ்வு - 2019
வேலணை பிரதேச செயலகத்தின் ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் 2019.05.02ம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலரின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் 46 குருதிக்கொடையாளர்கள் இரத்ததானம் வழங்கினர்.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் 2019.05.02ம் திகதி மதியம் 1.00 மணிக்கு கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
B3s மென்பொருள் கையாள்வது தொடர்பான பயிற்சி
B3s மென்பொருள் கையாள்வது தொடர்பான பயிற்சி வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.04.25,26 ஆகிய தினங்களில் சி.ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தரால் நடாத்தப்பட்ட இப்பயிற்சியில் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

























